பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொருட்களை ஏற்றி கொண்டு சென்னையிலிருந்து ஆற்காடு சென்ற பார்சல் லாரி ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் சாலையில் கவிழ்ந்தது.
பெங்களூர் சென்னை மார்க்கமாக வேகமாக வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்திருந்த லாரி மீது மோதி சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பார்சல் லாரியில் வந்த மேல்விசாரம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முத்தையா (வயது 26) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பார்சல் லாரியில் வந்த இரண்டு நபர்கள் லேசான காயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா காவல்துறையினர் முத்தையாவின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த விபத்தால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.