- முகப்பு
- தென்காசி: மாணவி தற்கொலை, பேராசிரியர்கள் கைது
தென்காசி: மாணவி தற்கொலை, பேராசிரியர்கள் கைது
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி இந்து பிரியா என்பவர், அங்குள்ள மனோ கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் முத்துமணி, பேராசிரியை வளர்மதி ஆகியோரே காரணம் என கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பேராசிரியர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.