தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா.

ராஜ்குமார்

UPDATED: May 31, 2023, 7:26:59 PM

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இயங்கும், தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தலைமையில் இன்று(31.05.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 107 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் தையல் இயந்திரங்களும்,16 பெண்களுக்கு மாவு ஆட்டும் இயந்திரங்களும், 14 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,

11 பெண்களுக்கு குடிசை தொழில் உதவிகளுமாக ரூபாய் 13,54,200 மதிப்பில் 149 பயனாளிகளுக்கு உதவியும், மாவட்டத்தில் தழிழ் வழி கல்வியில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற நான்கு மாணவர்களுக்கு, கடையநல்லூர்  ஷப்ரின் இமானா 590,

செங்கோட்டை கலைச்செல்வி 583,சங்கரன்கோயில் முத்துலட்சுமி 583, தென்காசி,கார்த்திகா 582 ஆகியோர்களுக்கு பரிசுகளையும், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended