• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வயலூர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களின் சடலத்தை சக நண்பர்கள் கொட்டும் மழையிலும் சுமந்து சென்று கிரிக்கெட் பேட் பால் வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம்.

வயலூர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களின் சடலத்தை சக நண்பர்கள் கொட்டும் மழையிலும் சுமந்து சென்று கிரிக்கெட் பேட் பால் வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம்.

சுரேஷ்பாபு

UPDATED: May 31, 2023, 6:32:48 AM

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வயலூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் வெற்றிவேல் (15 ) தினேஷ்குமார் (14) நேற்று முன் தினம் காலை வயலூர் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களும் இளம் கிரிக்கெட் வீரர்கள் என்பதால்  அவர்களின் உடல்கள் மீது கிரிக்கெட் பேட் பால் மற்றும் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று வைத்திருந்த கோப்பையை வைத்து சக நண்பர்கள் இறுதி ஊர்வலமாக தோளில் சுமந்து வந்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்தது காண்போரை கண்கலங்க வைத்தது.

VIDEOS

RELATED NEWS

Recommended