• முகப்பு
  • district
  • திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். பின்னர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் தெரிவித்ததாவது... தமிழ்நாடு மகளிர் ஆணையமானது எல்லா தரப்பிலும் மகளிருக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. மருத்துவத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூகப்பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பெண்கள் எதிராக குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறித்து இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, குழந்தை திருமணங்கள் நடைபெறும் இடங்களில் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணத்தினால் பல பெண்கள் கர்ப்பக் காலத்தில் இறந்து விடுகின்றனர் இதனை தடுக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு சீரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில், பெண்களிடம் வன்முறை தொடர்பான 294 புகார் மனுக்கள் பெறப்பட்டு 234 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 60 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. நிலுவையிலுள்ள மனுக்கள் விரைவில் முடிக்கப்படும். 10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் தங்களின் புகார்களை தெரிவிக்க புகார் சங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் உள்ளி;ட்ட பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.. திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended