• முகப்பு
  • அரசியல்
  • கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.திருவாரூரில் திருமாவளவன் பேட்டி.

கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.திருவாரூரில் திருமாவளவன் பேட்டி.

இளவரசன்

UPDATED: May 7, 2023, 4:24:47 PM

திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கான ஆட்சியாக சமூக நீதி ஆட்சியாக அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுகிற ஒரு நிர்வாகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியை பாராட்டுகிறது‌.எஞ்சிய மூன்று ஆண்டுகளும் மீண்டும் மக்களுடைய செல்வாக்கை பெறுவதற்கு வாழ்த்துகிறோம்.

கர்நாடகா சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என நம்புகிறேன்.கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் வெளியிடப்பட்டு மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது‌.

காவல்துறை அந்த படத்திற்கு பாதுகாப்பு அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை திட்டமிட்டு திரைப்படத்தின் மூலமாக திணிக்கிறார்கள்.

இந்தியாவின் பிரதமர் ஒரு திரைப்படத்திற்கு வக்காலத்து வாங்கி பேசுவது என்பது வேடிக்கையாக உள்ளது. தன்னுடைய பதவியை மறந்து விட்டு ஒரு திரைப்படத்தை பாராட்டி பேசுவது என்பது அந்த படத்திற்கு விளம்பரம் தேட செய்கிறாரா அல்லது வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறாரா என்கிற கேள்வி எழுகிறது.

தமிழக அரசு அந்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.அது தொடர்ந்து திரையிடப்பட்டால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கும் அமைதியை கெடுப்பதற்கும் வழி வகுத்து விடும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.தமிழக முதல்வர் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்‌.

இதுவரை 80 விழுக்காடு அளவில் மிக இலகுவாக நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறார். நிறைவேற்றப்பட வேண்டிய சில வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன.அவற்றையும் படிப்படியாக செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

எந்தெந்த வகையில் எல்லாம் இந்தியை திணிக்க முடியுமோ நிலைநாட்ட முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பாஜக செயல்பட்டு வருகிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட அனைத்து விதத்திலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறி உள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலமும் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர் கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.

எச்.ராஜா மட்டும்தான் இந்தியன் மற்றவர்கள் எல்லாம் ஆன்ட்டி இந்தியன். திமுகவை எதிர்க்கிறோம் என்கிற நிலைப்பாட்டில் அவர் பேசுகிறார் தொழிலாளர்கள் புலம்பெயர்வது தவிர்க்க முடியாது. உலகம் முழுவதும் நடக்கக்கூடியது. புலம்பெயர்ந்து தான் பணியாற்ற முடியும்.ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது புலம்பெயர்வதால் எந்த தேசமும் பாதிக்கப்படாது என அவர் கூறினார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended