• முகப்பு
  • district
  • தமிழ்நாடு பேக்கோ லோடர் ஆப்ரேட்டர் நலச்சங்க புதிய கிளை துவக்கவிழா.

தமிழ்நாடு பேக்கோ லோடர் ஆப்ரேட்டர் நலச்சங்க புதிய கிளை துவக்கவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற  பேக்கோ டோலர் நலசங்க புதிய கிளை துவக்க விழா உறுப்பினர்கள் சேர்க்கை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதியதாக தயாரிக்கப்பட்ட புள் ஜேசிபியினை ஆபரேட்டர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி ஓட்டி காட்டினர். இதனை தொடர்ந்து பேசிய மாநில தலைவர் தயாநிதி புள் ஜேசிபியின் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பேக்கொ லோடர் ஆபரேட்டர் நலச்சங்கதின் மாநிலத்தலைவர் L.தயாநிதி,மாநில செயலாளர். D. சுரேஷ்,மாநில பொருளாளர்.G. முனேஷ்,மாநில துணைத்தலைவர்.M. ராஜா,மாநில கௌரவத்தலைவர்.சங்கர். முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானமாக மறைந்த ஜேசிபி ஆபரேட்டர் தீபன் ஆப்ரட்டருக்கு இரங்கல் தெரிவித்தல். இறந்துபோன ஆபரேட்டர் தீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆபரேட்டர்கள் இறந்தால் அரசு பொது நிவாரண நிதியிலிருந்து நிதியை  நியாயமாக வழங்க வேண்டும். ஜேசிபி ஆப்ரெட்டர்களுக்கு நலவாரியம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டாயம் அமைத்து தரப்படும். போன்ற 10 வித தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . ராணிப்பேட்டை,திருவள்ளூர்,செஞ்சி, வேலூர்,திண்டிவனம்,பண்ருட்டி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து  மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் ஜேசிபி ஆபரேட்டர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended