• முகப்பு
  • ஆன்மீகம்
  • எட்டுக்குடி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய சுவாமி தரிசனம், 56 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது நடைபெறும் பால் அபிஷேகம்.

எட்டுக்குடி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய சுவாமி தரிசனம், 56 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது நடைபெறும் பால் அபிஷேகம்.

செ.சீனிவாசன்

UPDATED: May 6, 2023, 7:44:40 AM

உலகிலேயே எங்குமே இல்லாத அளவிற்கு, 56 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது நடை சாத்தப்படாமல் நடைபெறும் பாலபிஷேகத்தைக் காண இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பக்தர்கள் வருகை,

குறிப்பாக நேற்று முதல் இன்று அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் குறைவின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

அதிகாலையில் இருந்து கூட்டம் மேலும் அதிகரித்து, சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து ரதக்காவடிகளை சுமந்த படியும் இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எட்டுக்குடி விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended