- முகப்பு
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீ
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீ
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
மேலும் இந்த வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை விடுவிக்க மத்திய அரசு மறுத்து வந்த நிலையில் அவர்கள் பரோலில் அவ்வப்போது வெளியே வந்து சென்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.