காட்பாடியில் திமுக தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி சார்பில் கோடை தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
வாசுதேவன்
UPDATED: May 6, 2023, 10:19:41 AM
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் திமுக தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தனது பொற்கரங்களால் இளநீர், மோர், தர்ப்பூசணி போன்றவற்றை வாரி வழங்கினார்.
இந்நிகழ்வில் வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில்குமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, வேலூர் மாநகராட்சி காட்பாடி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா,
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, சித்ரா மகேந்திரன், கே.ஜி.சீனிவாசன், டீட்டாசரவணன், வட்டச் செயலாளர்கள் பி.விநாயகம், எ.எம்.சம்மந்தம், இளைஞரணி கமல் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் திமுகவினர் வழங்கிய இளநீர், மோரை பருகியும், தர்பூசணி பழங்களை உண்டு தாகசாந்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.