Author: மேலப்பாளையம் ஹஸன்

Category: மாவட்டச் செய்தி

கோடை விடுமுறையை, பயனுள்ள வகையில் களித்திடும் வகையில், பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட மத்திய நூலகம், அதன் வாசகர் வட்டம் மற்றும் அரசு அருங்காட்சியகம் ஆகியன இணைந்து, மாணவ- மாணவியரின் கலைத்திறன், வாசிப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, கோடைகால பயிற்சி முகாமிற்கு, ஏற்பாடு செய்துள்ளன.

அதன் ஒருபகுதியாக, மாவட்ட மத்திய நூலக கூட்ட அரங்கில், இன்று (மே.10) காலையில், கதை சொல்லும் பயிற்சி நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை தலைமை வகித்தார். துணைத்தலைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட மத்திய நூலக முதன்மை நூலகர் இரா.வயலட் ஒருங்கிணைப்பாளர் நன்நூலகர் அ.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, இணைய வழியில், கருத்துரை வழங்கினார்.

பயிற்சியை, மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். நாடக இயக்குனரும், பிரபல கதை சொல்லியுமான சந்திரமோகன், கதை சொல்லும் பயிற்சியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவ எழுத்தாளர் சூடாமணி, வாசகர் வட்டம் பாலசுப்பிரமணியன். சு. முத்துசாமி, நூலகர்கள் இரா. முத்துலட்சுமி, சீனிவாசன், முத்துராமன் கலந்து கொண்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பயிற்சி பெற்றனர்.

Tags:

#tirunelvelinews #tirunelvelinews , #tirunelvelinewstamil , #tirunelvelinewspaper , #tirunelvelinewschannel , #tirunelvelinewsyesterday , #tirunelvelinewslive , #tirunelvelimavattamnews , #இன்றையசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையமுக்கியசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltirunelvelitamilnadu , #indrayaseithigaltirunelveli , #todaynewstirunelveli , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #tirunelvelitodaynews , #tirunelvelilatestnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews
Comments & Conversations - 0