- முகப்பு
- காவலர் தூக்குப்போட்டு தற்கொலை ?
காவலர் தூக்குப்போட்டு தற்கொலை ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் :
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பயிற்சி காவலர் பரத்குமார் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது வாடகை பாத்திர குடோனில் மர்மமான முறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
#பயிற்சிகாவலர் #policesuicide #kumbakonam #கும்பகோணம் #tginews #thegreatindianews #todaytamilnews