• முகப்பு
  • அரசியல்
  • குடும்பத்துடன் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு.

குடும்பத்துடன் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு.

சுரேஷ் பாபு

UPDATED: May 29, 2023, 3:02:20 PM

திருவள்ளூர் மாவட்டம் அல்லிக்குடி கிராமத்தில் வசிக்கும் கோபி என்பவர் தன்னுடைய குடும்பத்தினர் 58 ஆண்டுகளாக வசித்து வரும் 2 1/2 சென்ட் நிலத்திற்கு அரசு இலவச பட்டா வழங்கியுள்ளனர்.

இந்த நிலத்தில் தான் வீடு கட்டி வசித்து வரும் நிலையில் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான வழியில் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அல்லிக்குழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பிரமுகர் ஏடி பாஸ்கர் எங்களின் வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் வேலி அமைப்பு வீட்டிற்கு செல்ல முடியாமல் தடுத்து வருகின்றார்.

இதன் காரணமாக வீட்டை சுற்றியும் முள் புதர்கள் மண்டி கிடப்பதனால் நச்சு பூச்சிகள் தொல்லை அவ்வப்போது உள்ள நிலையில் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து வாழ முடியவில்லை என்பது குறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலர் திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தன் குடும்பத்தை வாழ வைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தான் குடும்பத்துடன் உயிர்விட முடிவு எடுத்து இருப்பதாகவும் தெரிவித்து, கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக் கண்ட போலீசார் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட கோபியை தடுத்து தண்ணீர் ஊற்றி பின்னர் திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended