பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அவர்கள் படித்த அரசு பள்ளியில் தொடர்ந்து பயில மறுப்பு.
முகேஷ்
UPDATED: May 22, 2023, 1:25:12 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்ததால் மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.. மேலும் மறுப்பு தெரிவித்தால் பெற்றோர்களும் இணைந்து போராட முடிவெடுத்துள்ளனர்.