- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நீலகிரி மாவட்டம் கேத்தி தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகன விபத்தில் பலி
நீலகிரி மாவட்டம் கேத்தி தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகன விபத்தில் பலி
பிலிப்ராஜ் ரவி
UPDATED: May 30, 2023, 7:42:00 PM
குன்னூர் பாய்ஸ் கம்பெனியை சார்ந்த ரித்திக் சேவியர் மற்றும் ரிக்சன் ரோஹித் என்கின்ற இரண்டு மாணவர்கள் இன்று மாலை தங்கள் இருசக்கர வாகனத்தில் கேத்தி பாலடா பகுதி வழியாக வரும்போது எதிர்பாராத விதமாக கேரட் லோடு ஏற்றி வந்த லாரியில் மோதி விபத்து சம்பவ இடத்தில் இருவரும் பலியானார்கள்.
விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு உதகை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி கேத்தி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடன் படிக்கும் மாணவர்கள் கலங்கி நிற்கின்றனர்.