• முகப்பு
  • குற்றம்
  • மல்யுத்த வீராங்கனைளுக்கு நீதி கேட்டு திருவாரூரில் போராட்டம்.

மல்யுத்த வீராங்கனைளுக்கு நீதி கேட்டு திருவாரூரில் போராட்டம்.

இளவரசன்

UPDATED: May 17, 2023, 9:25:03 AM

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் திருவாரூர் தலைமை தபால் அஞ்சலகம் முன்பு இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமயந்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காமன் வெல்த் போட்டியில் பதக்கம் பெற்று தந்த வினேஷ் போகத், சாக்சி மாலிக்,கீதா போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் மீது பா.ஜ.கவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசண் சரண் சிங் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட வீராங்கனைகள்  2023 ஜனவரியில்  டெல்லி ஜந்தர் மந்தரில் முதற்கட்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், 

இந்திய அரசுநடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்தும் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் 

நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூசண் சரண் சிங்ஐ கைது செய்து, பதவி நீக்கம் செய்திட வேண்டும் என நடைபெற்ற போராட்டத்தில் இரு அமைப்பின் நிர்வாகிகள் சு.பாலசுப்பிரமணியன்,

ஆர்.சுலோச்சனா, தமிழ்செல்வி ராஜா, ஜி.சரவணன், ஜெ.பி.வீரபாண்டியன், எம்.நல்லசுகம், ஆர்.பூபதி, ஆர்.உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர், போராட்டத்தை தொடர்ந்து மாதர் சங்கத்தின் சார்பில் பாலியல் குற்றத்தை தடுத்திட கையொழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended