இலங்கையின் அவலநிலை : இந்தியா அறிக்கை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இலங்கையின் நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஸ்ரீ அரிந்தம் பாக்சி பதிலளித்தார்.
இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் நமது இரு நாடுகளும் ஆழமான நாகரீக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை நாங்கள் அறிவோம், மேலும் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சித்த இலங்கை மக்களுடன் நாங்கள் நின்றோம்.
எமது அண்டை நாடு முதல் கொள்கையில் இலங்கை வகிக்கும் கேந்திர இடத்தைப் பின்பற்றும் வகையில், இலங்கையின் பாரதூரமான பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்காக இந்தியா இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகளை நாம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முற்படும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது.
இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.