பெரம்பலூர் அடுத்த எளம்பலூரில் ஸ்ரீ கரடி முனீஸ்வரர் ஆலய திருவிழா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் அருகில் எளம்பலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேல் கரடி முனீஸ்வரன் என்கிற ஆலயம் சென்னை தேசிய நெடுஞ்சாலை தண்ணீர் பந்தல் என்கிற இடத்தில் எழுந்தருளியுள்ளது.
சாலை விரிவு பெற்ற பின்னர் அந்த ஆலயத்தில் வழிபட சிரமமடைந்த நிலையில் பின்பு அண்ணாமலை என்கிற கோவில் பூசாரி முயற்சியில் பொது மக்களின் ஆதரவோடு பிரம்மாண்டமாக புதிய தோற்றத்தில், கம்பீர தோற்றததுடனும் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கரடி முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவில் இன்று காலை காலை 7:45 மணிக்கு மேல் சைவ பூஜையும், நண்பகல் ஒரு மணிக்கு மேல் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடனாக கிடா, கோழி, பன்றி ஆகியவைகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர்.
மேலும் இவ்விழாவில் எராளமான பக்தர்கள் ஊர் பொதுமக்கள் குறிப்பாக சென்னையிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்