திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கவின் கலைமன்ற விழா.
மேஷாக்
UPDATED: May 13, 2023, 8:57:56 AM
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கவின் கலைமன்ற விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார். விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பேசிய ஸ்ரீநாதா போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், போதைப் பொருள் பற்றி மாணவ - மாணவிகளிடம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்