உத்தமபாளையம் பண்ணைப்புரத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பண்ணைப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட, உட்கடை பகுதிகளான மல்லிங்காபுரம், ரெங்கநாதபுரம், மற்றும் சின்னன்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மல்லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலர் மு. பாண்டி அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு வருவாய் அலுவலர்கள் பால்ராஜ், மற்றும் பாலமுருகன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடி தீர்வு காணப்பட்டது.
இந்த முகாமில் அரசு அலுவலர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சாந்தி அவர்கள் பணிகள் குறித்து ஆய்வு செய்தார், இதனால் பொது மக்கள் அலையாமலும், காலம் விரையமாகமலும் உள்ளதாக அரசுக்குநன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா