• முகப்பு
  • ஆன்மீகம்
  • சத்தியமங்கலத்தில் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஈரோடு எகனாமிக் சேம்பர் இணைந்து சமூக நல்லிணக்க ரம்ஜான் (ஈத்-மிலன்) நிகழ்ச்சி.

சத்தியமங்கலத்தில் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஈரோடு எகனாமிக் சேம்பர் இணைந்து சமூக நல்லிணக்க ரம்ஜான் (ஈத்-மிலன்) நிகழ்ச்சி.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 21, 2023, 2:24:29 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சத்தியமங்கலம் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஈரோடு எகனாமிக் சேம்பர் இணைந்து சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சத்தியமங்கலம் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் செயலாளர் அஸ்கர்அலி வரவேற்றார், ஜமாத் தலைவர் நதிமுல்லாகான் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பஷீர், பொருளாளர் சுபேருல்லா முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை துணை பொதுச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி,அன்னூர் ஓதிமலை சிவநேச அடிகளார், சத்தியமங்கலம் கிறிஸ்தவ ஆலயத்தின் அருட்தந்தை ரிச்சார்ட் கலந்து கொண்டு மதம் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

சத்தியமங்கலம் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஈரோடு எகனாமிக் சேம்பர் சார்பில் சிறந்த சமுக சேவைக்கான விருதுகளை ஈரோடு மாவட்டம் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினருக்கும், சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் அமைப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended