• முகப்பு
  • other
  • பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்...!!! உலகம் முழுவதும் 38ஆயிரம் கோடிகளுக்கு அதிகமாக பூ வகைகள் உள்ளது. ஆனால் 1000 கோடிப்பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பூக்களைச் சூடும் கால அளவு முல்லை பூ - 18 மணி நேரம் அல்லி பூ - 3 நாள்கள் வரை தாழம் பூ - 5 நாள்கள் வரை ரோஜா பூ - 2 நாள்கள் வரை மல்லிகை பூ - அரை நாள்கள் வரை செண்பக பூ - 15 நாள்கள் வரை சந்தன பூ - 1 நாள்கள் மட்டும் மகிழம் பூ மற்றும் குருக்கத்திப்பூ - சாப்பிடும் போது மட்டும் சூடி கொள்ளலாம். மந்தாரைப் பூ, பாதிரிப் பூ, மாசிப் பூ - இந்தப் பூக்களில் வாசனை இருக்கும் வரை சூடிக்கொள்ளலாம். பூக்களின் பயன்கள்: ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ - மன அமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல்வலி, பல்சொத்தை போன்ற பல குறைபாடுகளை நீக்கும். வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும். சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும். தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும். கனகாம்பரம் பூ - தலைவலி மற்றும் தலை பாரங்களை சரிசெய்யும். தாழம் பூ, மகிழம் பூ, சந்தன பூ, ரோஜா பூ செண்பக பூ போன்றவை வாதம் மற்றும் கபத்தைக் குறைக்கக் கூடியவை. பூக்களைச் சூடும் முறை: பூக்களை காதின்மேல் மற்றும் கீழ்நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும். ஜாதி மல்லி பூ , செவ்வந்தி பூ , குடசப்பாலை பூ , பாதிரி பூ , மகிழம் பூ , செண்பகப் பூ , சந்தனப் பூ , ரோஜா பூ போன்றவை கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும்நல்லது. மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளை பூ போன்றவையுடன் கற்பூரத்துடன் சேர்த்துச்சூடினால் மனஅமைதி பெற உதவும். மல்லிகை பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லை பூ, வில்வப் பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம். பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்: பூக்களில் உள்ள பிராணஆற்றல், மூளைச்செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாள மில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவி செய்கிறது. இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது. தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும். மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. சும்மாவா சொன்னாங்க பெரியவங்க பெண்களை பூவைன்னு.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended