• முகப்பு
  • tamilnadu
  • ஐயா எங்களையும் கொஞ்சம் கண் திறந்து பாருங்கையா... பொதுமக்கள் கதறல்.

ஐயா எங்களையும் கொஞ்சம் கண் திறந்து பாருங்கையா... பொதுமக்கள் கதறல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் (தாலுகா) இலவம்பாடி ஊராட்சி இலவம்பாடி கிராமம் திரௌபதியம்மன் கோயில் தெருவின் அவலநிலை... சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலைமை அனுபவித்து வருகின்றனர் இரு சக்கர வாகனங்கள், கார் ஆட்டோ , டிராக்டர் விவசாயிகள் நெல் ஏற்றிச்செல்ல வேன் மற்றும் ஏன் சைக்கிள் கூட எடுத்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மழை கழிவுநீர் வீடுகளின் உள்ளே புகுந்து விடுகிறது இந்த தெருவில் இருபது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் பல விதமான பூச்சிகள் மற்றும் பாம்புகள் விட்டிற்குள் புகுந்துவிடுகிறது மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பணியை கட்டிட விதிமுறைப்படி திட்டமிட்டு தரமாகவும் சிறப்பாகவும் முடித்து தெரு சாலை அமைத்து பொது சுகாதாராம் உறுதிபடுத்தி தரும்படி பொதுமக்கள் கோரிக்கை... இது குறித்து நான்கு ஆண்டுகளாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அவலநிலை போட்டோ வீடியோ எடுத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended