ஒற்றை தலைமை ஈபிஎஸ் கலக்கம் ஓபிஎஸ் காய் நகர்வு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நாளை நடை பெறும் என அறிவிக்கப் பட்டுள்ள பொதுக் குழு நடைபெறகூடாது எனதடை கோரியும், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்யக்கூடாது என நீதி மன்றத்தில் வழக்குகளை கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் கட்சியில் பெரும் பாண்மை பழனிச் சாமிக்குத்தான் இருக்கிறது. அதே சமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக் குழுவை கூட்ட வேண்டும், அதில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு இருவரும் இணைந்து ஒப்புதல் அளித்தால்மட்டுமே தேர்தல்ஆணையம் அதனை ஏற்றுக்கொள்ளும்.
இதனால் பழனிசாமிதரப்பினர் பன்னீர் செல்வம் தரப்பில் பேசி உள்ளனர்.
அப்போது பிரச்சினை செய்யாமல் கட்சியின் ஒற்றைத்தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், தலைவர், அவைத்தலைவர் உயர் மட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட எந்தப்பதவிகளையும் வழங்கத்தயார் என தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஆயிரம்கோடி அன்பளிப்பு எனவும் பேசி உள்ளனர்.
ஆனால் ஒற்றைத்தலைமைக்கு இப்போது விட்டுக்கொடுத்தால் தனது அரசியல்வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என பன்னீர் செல்வம் மறுத்து இருக்கிறார்.
பன்னீர் செல்வம் பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க லாம், அவரது ஒப்புதல் இல்லாமல் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறை வேற்றப்பட்டால் மீண்டும் ஒருமுறை இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்கிறார்கள் பன்னீர் செல்வம் தரப்பினர்.
மேலும்
ஏபிஎஸ் அமமுக இணைப்பு நிகழ்வாக கூட மாற வாய்ப்பு.
ஏற்கனவே சசிகலா ஓபிஎஸ் மறைமுக பேச்சுவார்த்தை என செய்திகள் உலாவருகின்றன.
காரணம் அதன் மூலம் ஏபிஎஸ் கை ஓங்க வாய்ப்பு.
செய்தியாளர்
பா. கணேசன்