Author: THE GREAT INDIA NEWS

Category: political

தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பணம் செய்து தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த.வி.கே. சசிகலாவிற்கு வேங்கையன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டனர். அதன் பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய வி.கே.சசிகலா தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து கொலை, கொள்ளை, பெண்களின் செயின் பறிப்பு உள்ளிட்ட செய்திகள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களிலும் மற்றும் சமூக ஊடகாலங்களில் தினம் தோறும் வந்த வண்ணமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது, இதனை தொடர்ந்து பேசிய அவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயல்வோர்களுக்கு மக்கள் தக்க பாடங்கள் அளிப்பார்கள் எனவும், அதிமுக உருவாக்கிய மக்கள் தலைவர் எம்ஜிஆர் அதனை வழி நடத்திய ஜெயலலிதா போன்றவர்களின் கனவோடு இந்த கட்சி நூற்றாண்டு காலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#kallakurichinewstoday #kallakurichinewstamil #kallakurichinewspapertoday #kallakurichinewslivetoday #theninews #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalkallakurichi #todaynewskallakurichi #todaynewstamilnadu #todaytamilnadunews #vksasikala #dmk #robbery #theft #thief #rowdys #rowdies #gangsters #ganja #abin #indrayaseithigalkallakurichitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0