குமரியில் அனுமதி இன்றி மண் கடத்திய டெம்போக்கள் பறிமுதல்.
முகேஷ்
UPDATED: May 21, 2023, 8:30:00 PM
கன்னியாகுமாரி மாவட்டம், ஆரல்வாய்மொழி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் முப்பந்தல் ரயில்வே ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த டெம்போக்களை சோதனை செய்தனர்.
இந்நிலையில் அரசு அனுமதி இன்றி செம்மண் கடத்தி அதிக விலைக்கு விற்க கொண்டு செல்ல படுவது தெரிய வந்தது.
வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஓடி விட்ட நிலையில் டெம்போக்களை போலீசார் கை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.