• முகப்பு
  • உலக நாடுகளின் கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர் மற்றும் அந்நாட்டின் தலைநகரத்தை பார்த்தவுட?

உலக நாடுகளின் கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர் மற்றும் அந்நாட்டின் தலைநகரத்தை பார்த்தவுட?

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உலகத்தில் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் பெயர்களை அந்நாட்டின் கொடியை பார்த்து சொல்லும் 5 வயது பூர்த்தியடையாத குழந்தை அந்நாட்டின் தலைநகரத்தையும் சேர்த்து சொல்லி அசத்தி வருகிறான். திருவாரூரை சேர்ந்த ஹரிணி அவரது கணவன் கார்த்திகேயன் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை அனிருத். இவர்கள் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் வசித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக 6 வயதுக்கு முன்பாக குழந்தைகள் சேர்க்கப்படும் மழலை பள்ளிகள் திறக்கப்படாமல் 2020 கல்வியாண்டு முதல் இருந்து வருகின்றன. இந்நிலையில் திருவாரூரை பூர்வீகமாக கொண்ட ஹரிணி 5 வயது பூர்த்தியடையாத தனது குழந்தை அனிருத்க்கு உலகத்தில் மொத்தம் உள்ள 195 நாடுகளின் கொடி மற்றும் அதன் தலைநகரங்களை இணையத்தின் வாயிலாக தனது மடிகணினியில் பதிவிறக்கம் செய்து கடந்த ஒரு சில மாதங்களாக சொல்லி கொடுத்து தந்துவந்துள்ளார். இதன் அடிப்படையில் இன்று திருவாரூரில் குழந்தை அனிருத் மடிகணினியின் மூலம் உலக நாடுகளின் கொடியை பார்த்ததுமே யோசிக்காமல் அந்நாட்டின் பெயரை சொல்லுவதோடு, அந்நாட்டின் தலைநகரத்தையும் சேர்த்து தனது மழலை குரலில் சொல்லி அசத்தி வருகிறான். தனது குழந்தையின் திறமையை அரசு அங்கீகரித்து சான்று வழங்கி கௌரவிக்க முன்வர வேண்டும் என்பது குழந்தை அனிருதிதின் பெற்றோர்கள் எதிர்பார்பாக உள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended