• முகப்பு
  • குற்றம்
  • திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி செயல்படும் பார்களுக்கு சீல்

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி செயல்படும் பார்களுக்கு சீல்

கோபிநாத்

UPDATED: May 26, 2023, 6:57:46 PM

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி செயல்படும் பார்களுக்கு சீல் வைக்கும் பணியில் கலால் துறையினரும், தாசில்தாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்கள் மற்றும் உரிமை புதுப்பிக்கப்படாமல் செயல்படும் பார்கள் என அனைத்தையும் மூடும் நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிழக்கு தாலுகா தாசில்தார் தமிழ்ச்செல்வி, மேற்கு தாலுகா தாசில்தார் அபுரிஸ்வான், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சிறுமலை பிரிவு, என். ஜி. ஓ காலனி, யாகப்பன்பட்டி, ஒத்தக்கடை, ராமையன்பட்டி, குட்டத்துப்பட்டி, ஓடையூர், ஓடைப்பட்டி, ரங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பார்களை பூட்டி சீல் வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended