நடுநிலைப் பள்ளியில் அறிவியல் திருவிழா.
மகேந்திரன்
UPDATED: May 20, 2023, 7:55:43 PM
முசிறிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.. வானவில் மன்ற கருத்தாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அசோக் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவில் சிந்தனை தூண்டவும், மூடநம்பிக்கையை போக்கும் விதமாகவும், அறிவியல் எளிய முறை சோதனைகளாகவும், எளியமுறையில் கணக்கு செயல்பாடுகளும் கற்றுத் தரப்பட்டது.
மந்திரமா தந்திரமா பேப்பரில் ஓரிகாமி போன்றவை கற்று தரப்பட்டது மாணவர்களுக்கு விளையாட்டு பாட்டு கதை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் வெயிலில் விளையாடும் போது சோர்வடைவதை தடுக்கவும், ஆறு குளம் ஏரி போன்ற பகுதிக்கு சென்று அதனால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கவும், இத்திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாலா ராமச்சந்திரன், முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார்., நகர்மன்ற உறுப்பினர்ர்கள் விஸ்வநாதன், மற்றும் இல்லம் தேடி கல்வி முசிறி தன்னார்வலர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.