• முகப்பு
  • district
  • அரசு பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.

அரசு பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சேந்தநாடு செல்லும் தடம் எண் 5 இந்தப் பேருந்தில் தினந்தோறும் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்தில் பள்ளிச் செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருவது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த பேருந்தில் மாணவர்கள் தினம் தோறும் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியவாறும் மேற்கூரையில் அமர்ந்தவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended