வேப்பந்தட்டை அடுத்த நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வேப்பந்தட்டை அடுத்த நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழு தலைவர், துணை தலைவர், மற்றும் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டது, பின்பு கல்வி மேம்பாட்டிற்காக 15000/- ரூபாய் நன்கொடை சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியை ராணி அவர்களிடம் கொடுக்கப் பட்டது.
கூட்டத்திற்கு வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் இராமலிங்கம் அவர்கள் முன்னிலை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியை ராணி தலைமை வகித்தார், மேலும் இக்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.