- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தாயை கொலை செய்த மகன் போலீசில் சரண்.
தாயை கொலை செய்த மகன் போலீசில் சரண்.
முகேஷ்
UPDATED: May 24, 2023, 7:23:49 AM
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகேயுள்ள திட்டுவிளையை சேர்ந்தவர் பவுல் (71) இவரின் சொத்தை அவர்களது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுப்பதில் எழுந்த பிரச்சினையில் அவரது மகன் மோகன்தாஸ்( 52) ஆட்டோ டிரைவர் என்பவர் ஆத்திரத்தில் நேற்று இரவு குடிபோதையில் தந்தையும், தாயையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் தாய் அமலோற்பவம் சம்பவ இடத்தில் உயிரிழ்ந்தார்,தந்தை பவுல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அதனை தொடர்ந்து தாயை கொலை செய்த மகன் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.