திருவாரூரில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை,ஒருவர் தப்பி ஓட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் அதிக அளவில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டிஎஸ்பி சோமசுந்தரம் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்த நான்கு பேரிடம் போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் ரூபாய் 25ஆயிரம் மதிப்புள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.
அவர்கள் மேலும் வைத்திருந்த ரூபாய் 55 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள் , விசாரணையில் அவர்கள் கும்பகோணம் முல்லை நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன்மகாலிங்கம் வயது 32 இவரது அண்ணன் அருண்குமார் வயது 33 திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் வடக்கு தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தியாகராஜன் வயது 55 என்பது தெரிய வந்தது.
விசாரணையில் இவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது வெளி மாநில லாட்டரி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர், இவர்களுடன் வந்த திருச்சியை சேர்ந்த பஷீர் என்பவர் தப்பி ஓடிவிட்டார் இவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.