Author: மாரிமுத்து

Category: குற்றம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் போலீசார்  (16.05.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் to வெள்ளப்பட்டி கடற்கரை சாலை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பட்டுராஜா (37) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரி பட்டுராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட  பட்டுராஜா மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 6 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சூரங்குடி காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #rowdy #rowdies #ganja #kanja #abin #drugs #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0