பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டரில் சவாரி!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜ்பூரில் பேசிய மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வில் மாநில, மாவட்ட வாரியாக அதிக மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள்.
இது மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் என்றார்.
செய்தியாளர் பாஸ்கர்.