• முகப்பு
  • district
  • செருப்பைத் தலையில் சுமந்த சமூகம் என்ற சர்ச்சை பேச்சால் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார்.

செருப்பைத் தலையில் சுமந்த சமூகம் என்ற சர்ச்சை பேச்சால் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் நடிகருமான லியோனி பேசுகையில் செருப்பை தலையில் சுமந்த சமூகத்தை மேயர் ஆக்கியது ஸ்டாலின் தான் என்று பேசினார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தலித் சமுதாயத்தை பற்றி லியோனி அவதூராக பேசியதாகவும் அதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் செயலாளர் ஏழுமலை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended