• முகப்பு
  • ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்ட.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்ட.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் , ஏராளமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொகுப்பு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 7850 உடனடியாக வழங்க வேண்டும், சுகாதார காப்பீடு திட்டத்தில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 70 வயதுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் திருவாரூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,thiruvarur news,Thiruvarur tamil news,latest thiruvarur tamil news updates,Pension,Retired civil servants

VIDEOS

RELATED NEWS

Recommended