- முகப்பு
- pondichery
- ஜிப்மர் மருத்துவமனையில் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு வெடிக்கிறது ?
ஜிப்மர் மருத்துவமனையில் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு வெடிக்கிறது ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அலுவலக பதிவேடுகள் மற்றும் நோயாளிகளின் குறிப்புகள் இந்தியில் இடம் பெற வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இந்த சுற்றறிக்கைக்குஅரசியல் கட்சிகள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம் ,நாம் தமிழர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் , புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், பாலன், மற்றும் மாநில நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.