• முகப்பு
  • india
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த பதினோரு வயது சிறுவனை மீட்பு பணிகள் தீவிரம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த பதினோரு வயது சிறுவனை மீட்பு பணிகள் தீவிரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சத்தீஸ்கர்மாநிலம் ஜாங்கிரி ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட்கிராமத்தை சேர்ந்த பதினோரு வயது சிறுவன் ராகுல்ஷாகு. இந்த சிறுவன் இன்றுமதியம் இரண்டு மணியளவில் தனது வீட்டிற்கு பின் புறம் பயன் பாடற்ற நிலையில் இருந்த 80 அடிஆழ ஆழ் துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து உள்ளான். சிறுவனின் அழுகைச்சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஆழ் துளை கிணற்றுக்குள் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு, போலீசார், தேசியபேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. இதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 80 அடி ஆழம்கொண்ட ஆழ் துளை கிணற்றில் சிக்கி உள்ள சிறுவனை மீட்கும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended