போக்குவரத்து துறை அமைச்சர்க்கு அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மருவத்தூர் வரை வந்த அரசு பேருந்தை அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 07/07/22 கல்பாடி எறையூர் வரைநீட்டுத் தந்த அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களின் சார்பாகவும் கிராம பொது மக்களின் சார்பாகவும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொட்டரை மற்றும் ஆதனூர் கிராமத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாமல் 10 கி.மீ நடந்து செல்லும் மாணவ மாணவிகள் குறும்பாபாளையம் வரை வரக்கூடிய அரசு பேருந்தை கொட்டரை & ஆதனூர் வரை நீட்டித்து தருமாறு கோரிக்கை.
ஆதனூர் மற்றும் கொட்டரை கிராமத்தில் இருந்து 30 பள்ளி மாணவர்கள் மருவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 கி.மீ நடந்து பயில்கின்றனர் .
இதனால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆட்படுகின்றனர் ,
எனவே அரசு பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்குமாறு கனிவுடன் கோரிக்கை வைத்து கொட்டரை ஆதனூர் கிராமம் வரை அரசு பேருந்தை நீட்டித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கொட்டரை மற்றும் ஆதனூர் கிராம பொதுமக்கள்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.