அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறையினர் பேருந்துகளில் ஆய்வுசெய்து பறிமுதல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காதுகளில் ஜவ்வு கிழியும் அளவு அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை தனியார் பேருந்துகளில் பயன்படுத்துவதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் தனியார் பேருந்துகளில் சோதனை செய்தனர் .
அப்போது 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அதிக அளவு ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஏர் ஹாரன்களை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ளும்படியும் மீரினால் பத்தாயிரம் ரூபாய் அவதாரம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.