Author: JK
Category: குற்றம்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையாளி முகத்தை சிதைந்த பாலத்தின் கீழ் தூக்கி வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து காவல் துறையினர் இறந்தவர் நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி ஆற்றுப்பாலத்திற்கு கீழே மற்றொரு இளைஞர் உடல் இருப்பது குறித்து தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் காவல்துறையினர் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், எஸ்.பி.சுஜித் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 2பேரின் கொலை செய்யப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Tags:
#trichynewstoday , #trichynewstamil , #trichynewspapertoday , #trichynewslivetoday , #trichynews , #இன்றையசெய்திகள்திருச்சி , #இன்றையசெய்திகள்திருச்சிதமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் , #indrayaseithigaltrichy , #todaynewstrichy , #todaynewstamilnadu , #todaytamilnadunews , #indrayaseithigaltrichytamilnadu , #indrayaseithigaltamilnadumavattangal , #TheGreatIndiaNews , #Tginews , #news , #மணப்பாறை , #manapparailatestnews , #manapparaitodaynews , #manapparainews