தாளவாடி அருகே டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தல்.
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 26, 2023, 12:09:51 PM
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகினாரை கரளவாடி பிரிவில் தாளவாடி பொது விநியோக திட்ட வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ், தனி வருவாய் ஆய்வாளர் தர்மராஜன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகளை கண்டதும் ரேஷன் அரிசி கடத்தி வந்தவர் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றார்.
இருசக்கர வாகனத்தையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.