- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேவர் சிலை முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டும் இராமேஸ்வரம் நகராட்சி.
தேவர் சிலை முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டும் இராமேஸ்வரம் நகராட்சி.
கார்மேகம்
UPDATED: May 9, 2023, 6:41:36 PM
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தேவர் சிலை அருகே அரசு மருத்துவ மனை ரயில் நிலையம் ஆகியவை ஒருங்கினைந்த பகுதியாக உள்ளது.
இங்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொது மக்கள் ரயில் நிலையம் வழியாகத் தான் செல்ல வேண்டி உள்ளது.
இவ்வழியில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது, கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதனை இராமேஸ்வரம் நகராட்சி தேங்கி நிற்கும் கழிவு நீரை உடன் அகற்ற வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இராமேஸ்வரம் தேவர் சிலை முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீரை இராமேஸ்வரம் நகராட்சி உடன் அகற்றுமா ? நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.