இவரால் ஆசிரியப்பணிக்கே இழுக்கு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பயிற்சி என கூறி மாணவியருக்கு காம வலைவிரித்த ஆசிரியர்.
சென்னை போக்சோ' சட்டத்தில் கைதான, சென்னை முகப்பேர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அரசின், 'நீட்' பயிற்சி மற்றும் தனக்கான முக்கிய பதவிகளின் பெயரில் மிரட்டி, மாணவியருக்கு பாலியல்தொல்லை அளித்ததாக, திடுக்கிடும் தகவல்வெளியாகி உள்ளது.
சென்னை முகப்பேர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதர்ராமசாமி சமீபத்தில், இவர் போக்சோ சட்டத்தில்கைதானார்.
இவர்மீது, குழந்தைகள் நலபாதுகாப்பு கமிஷனில், அடுக்கடுக்காக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடனும், 'வாட்ஸ் ஆப்' உரையாடல் விபரங்களுடனும், மாணவியர் பலர்புகார் அளித்து உள்ளனர்.
இதை அடுத்து, போலீசார் நடத்தியவிசாரணையில் பல்வேறுதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசிரியர் ஸ்ரீதர்ராமசாமி, பள்ளியில், + 2 வகுப்பாசிரியராக இருந்து உள்ளார்.
பொதுவாக, பெண்கள் மேல் நிலை பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் பணியாற்றவும், வகுப்பாசிரியராக செயல் படவும் அனுமதி கிடையாது. ஆனால், தன் போலி ஒழுக்கத்தை காட்டி, வகுப்பாசிரியர் என்றபதவியில் மறைந்து சேட்டைகள் செய்து உள்ளார்.
மாணவிகள் ஆண் ஆசிரியர்களிடம் நெருங்கி பழக காரணம் அவர்கள் தங்களது ஆசிரியர்களை தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதால் தான் என்பதை ஆண் ஆசிரியர்கள் அறிய வேண்டும். ஆசிரியைகளிடம் பழகும் மாணவர்கள் உறவில் தாயன்பு உள்ளது போல ஆசிரியர்கள் மாணவிகள் உறவில் தந்தையின் அக்கறையை மாணவிகள் பார்க்க வேண்டும்.
செய்தியாளர்
பா. கணேசன்.