• முகப்பு
  • district
  • புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஊழியர்.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஊழியர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி சுகாதார துறையின் கீழ் இயங்கும் ஆம்புலன்ஸ்களில் 42 ஓட்டுநர்கள்உள்ளனர். இவர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்காக அடிக்கடி போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று ராஜா என்ற ஓட்டுநர் சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அலுவலகத்திற்கு வந்த போது கையில் வைத்திருந்த மண்ணெண்யை தலையில் ஊற்றி கொண்டார்.தீப்பெட்டியை இயக்குனரிடம் கொடுத்து கொளுத்துமாறு கூறி காரின் முன் அமர்ந்தார். 42 ஊழியர்ளுக்கு சம்பளம் வழங்க முதல் அமைச்சர் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களை கொளுத்தி கொல்லுங்கள் என்றார். இதற்கு இயக்குனர், நிதி துறையை தான் அனுக வேண்டும் என கூறினார். அதற்குள் அங்கிருந்த ஊழியர்கள் ராஜா மீது தண்ணீரை ஊற்றி தலைமை செயலகத்தில் உள்ள நிதி துறை அலுவலகத்தில் இயக்குனரின் காரில் முன் இருக்கையில் அமரவைத்து அனுப்பினார்கள்...இதனால் இயக்குனர் அலுவலக வளாகத்தில் 15 நிமிடங்கள் பரபரப்பாங காணப்பட்டது... பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended