- முகப்பு
- புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்க மாற்றக் கூடாது என வலியுறுத்தி மின்துறை ஊழியர்கள் மற்று?
புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்க மாற்றக் கூடாது என வலியுறுத்தி மின்துறை ஊழியர்கள் மற்று?
Amsa
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி
புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்க துரித நடவடிக்கைகளை எடுக்க உள்ளதால் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் படுவதாக அனைத்து பொறியாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையிலும் புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்க மாற்றக்கூடாது என்று வலியுறுத்தியும் புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள தலைமை மின் துறை அலுவலகத்தில் ஒரு நாள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என்றும் அரசு இதற்கு ஒத்துழைக்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.