நாகப்பட்டினம் நகர பகுதிகளில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி:
செ.சீனிவாசன்
UPDATED: May 31, 2023, 1:52:18 PM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குட்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் மூன்று மணியளவில் கடுமையான சூறாவளி காற்றுடன் நாகை நகரப் பகுதியான புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபிஸ் ரோடு, ரயில் நிலையம், கோட்டை வாசல்படி உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரு மணி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.