• முகப்பு
  • இலங்கை
  • திராய்க்கேணி பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

திராய்க்கேணி பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

UPDATED: May 30, 2023, 6:37:32 AM

இணைந்த கரங்கள் அமைப்பினால், கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு இன்று ஆசிரியர் ஏ.எல்.பத்திமா சிபா தலைமையில் இடம்பெற்றது.


திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ட தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (40) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களான கே. விஜிதரன், திருமதி. ந. பவாணி ஆகியோரும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன், என்.லிரோஸ்காந், கே.ஜெயந்தன், எஸ்.சிருஸ்காந், டீ. தஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended