பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இடதுசாரி கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.